மினுவங்கொட நகரசபை நூலகத்தின் வரலாறு
பிரதேசத்தில் எந்தவொரு நூலகமும் இல்லாத காலகட்டத்தில் உப நகரசபை அதிகார பிரதேசத்தில் வறிய பாடசாலை மாணவ/ மாணவிகளுக்கு பாடசாலை புத்தகங்களை வழங்கியதன் மூலம் ஏற்பட்ட மக்கள் மலர்ச்சியை மேலும் மெருகூட்டும் எதிர்பார்ப்பில் இந்த நூலகம் 1966ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அப்போதைய நகரசபை துணை தலைவர் பதவியை வகித்த திரு டீ.பீ.விஜேதுங்கவை முதன்மையாகக்கொண்டு உப நகரசபையின்மூலம் உப நகரசபை அலுவலகத்தில் ஆரம்பிக்கப்பட்ட பொது நூலகம் பின்னர் பராக்கிரம விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள சிறிய கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது. அப்போது பராக்கிரம விளையாட்டு மைதானம் சிறய பூங்காவாக இருந்தது.
1971 சனவரி 01 முதல் மினுவங்கொட உப நகரசபை நகரசபையாக உயர்ந்தது. சமரக்கொடி மாவத்தை என்று பெயரிடப்பட்ட வீதியில் 24ஆம் இலக்க கட்டிடத்துக்கு பின்னர் நூலகம் கொண்டுவரப்பட்டது. முன்னர் இந்த கட்டிடம் நகரசபைக்குரிய உத்தியோகபூர்வ இல்லமாகும். பிற்காலத்தில் இதை நூலகத்துக்குப் பொருத்தமானவகையில் ஓரளவுக்குத் திருத்தி நூலகம் நடத்தப்பட்டுள்ளது. சமரக்கொடி மாவத்தை பிற்காலத்தில் சிறிவர்தன மாவத்தை எனப் பெயரிடப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த நூலகம் சிறிவர்தன மாவத்தையில் நகரசபை கட்டிடத்தின் மேல் மாடியில் நடத்தப்படுகின்றது.
தற்பொழுது மினுவங்கொட நகரசபை நூலகத்தைப் பயன்படுத்துகின்ற நீங்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய சேவைகள்
- இரவல் கொடுக்கும் பிரிவு.
- உசாத்துணை பிரிவு.
- சிறுவர் பிரிவு.
- பருவ சஞ்சிகைகள் மற்றும் பத்திரிகை பிரிவு.
- கல்விப் பிரிவு.
- விசேட தகவல்கள் மற்றும் பிரதேச தகவல்கள் சேர்க்கை.
- சமூக தகவல் சேவை.
இணைப்பாக்கம்
பெயரும் பதவியும் | முகவரி | தொலைபேசி இல | தொலைநகல் | மின்னஞ்சல் |
திருமதி ஏ.ஜீ.எம்.பி.மங்கலிகா நூலக பொறுப்பாளர் |
மினுவங்கொட நகரசபை, சிறிவர்தன மாவத்தை, மினுவங்கொட. | +94 112 295 275 / +94 112 297 636 |
+94 112 281 505 | இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
மயான சேவை
தேவையான பத்திரங்கள் ஆணங்கள்
- அடக்கம் செய்வதற்குத் தகுதியானது என கிராம உத்தியோகத்தரால் வழங்கப்பட்ட கடிதம்.
- மினுவங்கொட நகரசபை செயலாளரால் அங்கீகரிக்கப்பட்ட கோரிக்கை கடிதம்.
- 500.00 ரூபா கட்டணமொன்று அறவிடப்படும்.
தகனக்கூட சேவை
தேவையான பத்திரங்கள் ஆணங்கள்
- மரண சான்றிதழின் மூலப் பிரதியும் 01 போட்டோ பிரதியும்.
- தகனம் செய்வதற்குத் தகுதியானது என கிராம உத்தியோகத்தரால் வழங்கப்பட்ட கடிதம்.
- பூர்த்திசெய்யப்பட்ட தகனக் கூடத்தை ஒதுக்கிக்கொள்ளுவதற்கான விண்ணப்பம்.
கவனிக்கவும்
- தகனம் செய்வதற்கு திகதியையும் நேரத்தையும் தீர்மானிப்பதற்கு முன்னர் தகனக்கூடத்தை ஒதுக்கிக்கொள்க.
தகனக்கூடத்தை ஒதுக்கிக்கொள்ளக்கூடிய நேரம்
- பி.ப - 4.00
- பி.ப - 6.00
கட்டணங்கள்
நகரசபை அதிகார பிரதேசத்தில் | ரூ.5000.00 |
நகரசபை அதிகார பிரதேசத்திற்கு வெளியில் | ரூ.7000.00 |