கட்டிட திட்டங்களை அங்கீகரித்தல்
- சரியாகப் பூர்த்திசெய்யப்பட்ட கட்டிடமொன்றுக்கான அபிவிருத்தி விண்ணப்ப படிவத்துடன் பின்வரும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
- கட்டிட திட்டங்கள் 03.
- அங்கீகரிக்கப்பட்ட காணித்துண்டு திட்ட வரைபடத்தின் பிரதி.
- உரித்துறுதியின் பிரதி.
இசைவுச் சான்றிதழ் வழங்குதல்
- சரியாகப் பூர்த்திசெய்யப்பட்ட இசைவுச் சான்றிதழ் விண்ணப்ப படிவத்துடன் பின்வரும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
- அங்கீகரிக்கப்பட்ட கட்டிட வரைபடத்தின் பிரதி.
காணித் துண்டு திட்டங்களை அங்கீகரித்தல்
- சரியாகப் பூர்த்திசெய்யப்பட்ட துணை பிரிப்பு விண்ணப்ப படிவத்துடன் பின்வரும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
- துணை பிரிப்பு திட்டத்தின் மூலப் பிரதியும் 02 போட்டோ பிரதிகளும்.
- முழு காணித்துண்டுகளுக்குமான மூல வரைபடங்களின் பிரதியொன்று.
- உரித்துறுதியின் பிரதி.
வீதி ரேகை சான்றிதழையும் சுவீகரிக்கப்படமாட்டாது என்ற சான்றிதழையும் வழங்குதல்
- வீதி ரேகை சான்றிதழ் மற்றும் சுவீகரிக்கப்பட மாட்டாது என்ற சான்றிதழுக்குமான விண்ணப்பத்தை சரியாகப் பூர்த்திசெய்து பின்வரும் ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
- அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தின் பிரதி.
- உரித்துறுதியின் பிரதி.
நகரசபைக்குச் சுவீகரிக்கப்பட்டுள்ள அனைத்து பாதைகளைப் பராமரித்தலும் மேம்படுத்தலும்
நகரசபையினால் பராமரிக்கப்படுகின்ற சுமார் 153 பாதைகள் நகரசபை அதிகார பிரதேசத்தில் இருக்கின்றன. சபையின் நிதியங்கள், மாகாண மற்றும் அரச நிதி ஏற்பாடுகளைப் பயன்படுத்தி பாதைகளைப் பராமரிக்கும் பணிகளும் மேம்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. அத்துடன் 2015ஆம் ஆண்டில் மேற்குறிப்பிட்ட நிதி ஏற்பாடுகளின் கீழ் பாதைகளைப் பராமரிப்பதற்கும் புனரமைப்பதற்கும் 130 இலட்சம் ரூபா செலவிடப்பட்டது. மொத்த பாதைகளின் 80 மூ மான அளவை உள்ளடக்கக்கூடியவகையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்பொருட்டு பிரதேசத்தின் சங்கங்கள் மற்றும் சமூக அமைப்புகளின் பங்களிப்பைப் பெற்றுக்கொண்டு கருத்திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நடைபாதை ஓரங்களையும் மழை நீர் வடிகால்களையும் பராமரித்தலும் மேம்படுத்தலும்
நகர அதிகார பிரதேசத்தில் நடைபாதையோர புனரமைப்புக்கு கடந்த ஆண்டுகளில் முன்னுரிமையளித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் பிரகாரம் வீதி அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து நகர அதிகார பிரதேசத்தில் நடைபாதையோரங்களுக்காக இடைத் தொடர்பு கன்கிரீட் துண்டுகளைப் பரப்பி அபிவிருத்திசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நகரசபைக்கு உரிய பாதைகளின் வடிகால் புனரமைப்பு மற்றும் பராமரிப்பு என்பவை சபையினால் மேற்கொள்ளப்படுகின்றன. அத்துடன் இது தொடர்பாக முறைப்பாடுகளையும் ஆலோசனைகளையும் சபைக்கு முன்வைப்பதற்கு பொதுமக்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அபாயகரமான மரங்களை அகற்றுதல்
பொதுமக்களினதும் நிறுவனங்களினதும் முறைப்பாடுகளின் பரகாரம் அபாயகரமான மரங்களை அகற்றுவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எழுத்துமூலமான முறைப்பாடொன்றை செயலாளருக்குச் சமர்ப்பிப்பதன் மூலம் அபாயகரமான மரங்கள் தொடர்பாக அறிவிக்க முடியும். தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் பரிந்துரையின் அடிப்படையில் அபாயகரமான நிலையை அடையாளம் கண்டு மரங்களை அகற்றுதல் அல்லது அதற்குப் பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படும்.
நீர்க் குழாய்களைச் செலுத்துவதற்காக நகரசபை பாதைகளை சேதப்படுத்துவதை அனுமதித்தல்
- நீர் வழங்கல் சபையிலிருந்து வழங்கப்படுகின்ற விண்ணப்ப படிவத்தை செயலாளருக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.
- பாதையை சேதப்படுத்துவதை புதுப்பிப்பதற்காக மதிப்பிடப்பட்ட தொகையை நகரசபைக்குச் செலுத்தி நகரசபையிடமிருந்து எழுத்துமூல அனுமதியைப் பெற்று விண்ணப்பதாரர் நீர்வழங்கல் சபைக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
தெருவிளக்குகளைப் பராமரித்தல்
- நகரசபையின் மின்சார பிரிவின் மேற்பார்வையில் தெருவிளக்குகளின் பராமரிப்பு பணியை வருடம் முழுவதும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
- இது தொடர்பாக பொதுமக்களின் முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்ளுவதற்காகப் பதிவேடொன்று பேணப்படுகின்றது. அத்துடன் அதில் பதிவுசெய்வதன் மூலம் முறைப்பாட்டைச் சமர்ப்பிக்க முடியும்.
- மின்சார பிரிவு குறித்த முறைப்பாடுகளைப் பரிசீலித்து திருத்த வேலைகளை மேற்கொள்ளும்.
அத்துமீறிய நிர்மாணங்களைத் தடுத்தல்
- அதிகார பிரதேசத்தில் அத்துமிறிய நிர்மாணங்கள் தொடர்பாக பிரதேசவாசிகள் எழுத்துமூலம் முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்க முடியும்.கிடைக்கின்ற முறைப்பாடுகள் தொடர்பாக துரிதமாக விசாரணை நடத்தி தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் பரிந்துரையின் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
- அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு சட்பூர்வமான அனுமதியைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பதற்கு அறிவூட்டுவது அல்லது நகரசபை கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்.
பொதுமக்களின் முறைப்பாடுகளை விசாரணைசெய்தல்
- பொதுமக்களின் முறைப்பாடுகளை எழுத்துமூலம் செயலாளருக்கு அறிவிக்க வேண்டும்.
- குறித்த முறைப்பாடுகளை விசாரணைசெய்து நகரசபையின்மூலம் வழங்கக்கூடிய தீர்வுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
- குறித்த தீர்வை வழங்கக்கூடியது ஏனைய அரச அல்லது அரச சார்புடைய அல்லது தனியார் நிறுவனமாக இருந்தால் அதற்கு எழுத்துமூலம் அறிவித்து தீர்வு வழங்குவதற்கு இணைப்பாக்கம் செய்யப்படும்.
இணைப்பாக்கம்
பெயரும் பதவியும் | முகவரி | தொலைபேசி இல | தொலைநகல் | மின்னஞ்சல் |
திருமதி. சாந்தனி ராஜபக்ஷ வேலை அதிகாரி, கைத்தொழில் பிரிவு |
மினுவங்கொட நகரசபை, சிறிவர்தன மாவத்தை, மினுவங்கொட |
+94 112 295 275 / +94 112 297 636 |
+94 112 281 505 | இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
திரு. எஸ்.ஏ.ஐ.திலூப தொழில்நுட்ப உத்தியோகத்தர் |
மினுவங்கொட நகரசபை, சிறிவர்தன மாவத்தை, மினுவங்கொட | +94 112 295 275 / +94 112 297 636 |
+94 112 281 505 | இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
திரு உபுல் சந்திரசிறி கைத்தொழில் நிர்வாகி |
மினுவங்கொட நகரசபை, சிறிவர்தன மாவத்தை, மினுவங்கொட | +94 112 295 275 / +94 112 297 636 |
+94 112 281 505 | இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |