தாய்மார் உதவி மற்றும் சிறுவர் உதவி கருத்திட்டம்
மினுவங்கொட நகரசபையின் மூலம் வருடாந்தம் குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களின் கர்ப்பிணித்தாய்மார்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றபோது தேவைப்படுகின்ற பொருட் தொகுதியொன்று தாய்மார் கொடையாகவும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு குழந்தை உதவி தொகுதியொன்று குழந்தை கொடையாகவும் வழங்கப்படுகின்றது. பிரதேசத்தின் சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள், கிராமசேவை உத்தியோகத்தர் மூலம் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை பிரதேச செயலாளரிடம் சான்றுப்படுத்தி நகரசபை செயலாளரின்/ தலைவரின் அங்கீகாரத்தைப் பெற்று வெளிப்படைத் தன்மையுடன் இப் பணி செயற்படுத்தப்படுகிறது.
சமூக அடிப்படையிலான அமைப்புகளை ஊக்குவிப்பதற்கு நன்கொடை வழங்கும் கருத்திட்டம்
எமது அதிகார பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகளைப்போன்று பொதுமக்கள் பயன்பாட்டு சேவைகளையும் நலனோம்பல் நடவடிக்கைகளையும் ஒழுங்குமுறைப்படுத்துவதன் மூலம் மக்களின் சுபீட்சத்தையும் ஆன்மீக அபிவிருத்தியையும் ஏற்படுத்தும்பொருட்டு சமூக அடிப்படையிலான அமைப்புகளை வலுப்படுத்துவதற்காக வருடாந்தம் அத்தியாவசிய பொருட்களும் உபகரணத் தொகுதிகளும் வழங்கப்படுகின்றன.
பெண்களுக்கு வலுவூட்டும் கருத்திட்டம்
குடும்பத்துக்குள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ளும் நோக்கத்தில் சுயதொழிலில் ஈடுபடுத்தும் கருத்திட்டங்கள்,மினுவங்கொட நகரசபையின் மூலம் வருடாந்தம் மேற்கொள்ளப்படுகின்றது.அதிகார பிரதேசத்தில் உள்ள பெண்கள், சமூக சபை அங்கத்தினர்கள், மகளிர் சங்க உறுப்பினர்கள் மற்றும் சிறுவர் பாடசாலை பிள்ளைகளின் பெற்றோர்கள் ஆகியோரை இணைத்துக்கொண்டு இதன்போது பெண்களுக்கு வலுவூட்டப்படுகின்றது.
மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் கருத்திட்டம்
புரிந்துணர்வுள்ள புலமை மிக்க மக்களை உருவாக்கும் நோக்கில் எமத நகரசபையின் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித்திட்டங்கள் பல ஆண்டு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
- சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக அறிவூட்டல்.
- பரவும் நோய் தொடர்பாக அறிவூட்டல்.
- சேதனமயப்படுத்தல் தொடர்பாக அறிவூட்டல்.
- ஆயுர்வேத கைமருந்துகள் தொடர்பாக அறிவூட்டல்.
- மன அழுத்தங்களைத் தணிப்பதற்கான நிகழ்ச்சித்திட்டங்கள்.
- பாடசாலை மாணவர்களுக்கு உரிய பல்வேறு கல்வி நிகழ்ச்சித்திட்டங்கள்.
- சூழலின் நிலைபேறான நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டங்கள்.
இலக்கியத்தில் உள்ள ஆர்வத்தை மேம்படுத்துதல்
'மலரும் மினுவங்கொட நகரத்தின் வாசகர்கள் அனைவரையும் அறிவில் முன்னோக்கி' கொண்டு செல்லும் ஒரே நோக்கத்தை முதன்மையாகக் கொண்டு பொது நூலகத்துடன் இணைந்து பல்வேறு கல்வி, படைப்பாற்றல் மிக்க நிகழ்ச்சித்திட்டங்கள் என்பவற்றைத் தயாரிப்பதன் ஊடாக இலக்கியத்தின் மீதுள்ள ஆர்வத்தை மேம்படுத்துவற்கு எமது நகரசபை எதிர்பார்க்கின்றது.
வருடாந்தம் தயாரிக்கப்படுகின்ற நிகழ்ச்சித்திட்டங்கள்
- இலக்கிய போட்டிகளை நடாத்துதல்.( எழுத்து. பேச்சு ஆகிய பிரிவுகளில்)
- படைப்பாற்றல் மிக்க நாடக போட்டிகளை நடாத்துதல்.
- ஒவ்வொரு ஆண்டும் இடம்பெறுகின்ற இலக்கிய மாதத்தில் உள்நாட்டு இலக்கிய கலை வயலை போஷித்த மினுவங்கொட நகர கலைஞர்களைப் பாராட்டுதல்.
- இலக்கிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு விருது வழங்குதல்.
- எமது மரபுரிமைகளை நினைவூட்டுகின்ற இசை நிகழ்ச்சிகளை நடாத்துதல்.
போதைப்பொருள் மற்றும் மதுபான ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டங்கள்
'போதையற்ற சுதந்திர நாடொன்றை' உருவாக்கும் உன்னதமான இலட்சியத்தில் மினுவங்கொட நகரசபை 2015ஆம் ஆண்டு போதை ஒழிப்பு அலகொன்றை ஸ்தாபித்தது. அதன்மூலம் ஒவ்வொரு ஆண்டும் போதை ஒழிப்புக்காக நிறைவேற்ற வேண்டிய செயற்பாடுகள் உள்ளடங்கிய வருடாந்த திட்டமொன்றைத் தயாரித்து சமூக சபை, மகளிர் சங்கம், அரச நிறுவனங்கள் மற்றும் சிறிவர்தன பொதுநூலக வாசகர் கழகத்தை இணைத்துக்கொண்டு மக்களுக்கு அறிவூட்டுவதற்காகச் செயற்படுகிறது.
- பொதுமக்கள் நடமாடும் பொது இடங்களை இலக்காகக் கொண்டு பல்வேறு அறிவூட்டல் நிகழ்ச்சித்திட்டங்களைத் தயாரித்தல்.
- பொது இடங்களில் போதைப் பொருள் ஒழிப்புக்கு உரிய சுவரொட்டிகளையும் அறிவித்தல்களையும் காட்சிப்படுத்துதல்.
- போதைப் பொருள் ஒழிப்புக்கு உரிய தகவல்கள் உள்ளடங்கிய அறிவித்தல் பலகையொன்றை நடாத்துதல்.
- பாடசாலை மாணவர்களை போதைப்பொருளிலிருந்து விடுவிக்கும் நிகழ்ச்சித்திட்டங்களை நடத்துதல்.
- நாடகங்கள் வாயிலாகப் போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்புகள்பற்றி மக்களுக்கு அறிவூட்டுதல்.
இணைப்பாக்கம்
சமூக பிரிவு , திருமதி. சுரஞ்சி பத்தேவிதான - சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்.
முகவரி | : | மினுவங்கொட நகரசபை, சிறிவர்தன மாவத்தை, மினுவங்கொட. |
தொலைபேசி இல | : | +94 112 295 275 / +94 112 297 636 |
தொலைநகல் | : | +94 112 281 505 |
மின்னஞ்சல் | : | இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |