நீங்கள் நகர சபைக்குச் செலுத்துகின்ற மதிப்பீட்டு வரியை பொருளாதார சக்தியாக்கிக்கொண்டு நகர சபை நகரவாசிகளுக்கு தனித்துவமான சேவைகளை ஆற்றுகின்றது.
- நகரவாசிகளுக்குத் தேவையான பொதுவசதிகளை வழங்குதல் மற்றும் பொதுமக்கள் பயன்பாடு தொடர்பான சேவைகளை வழங்குதல்.
- பொது பாதைகளைப் பராமரித்தல் மற்றும் குப்பை கூளங்களை அகற்றுதல் மற்றும் கழிவு நீரை ஒழுங்குமுறையாக அகற்றுதல்.
- சுகாதார கல்வி கலாசார அம்சங்களின் மேம்பாட்டுக்கு உதவுதல்.
- பொதுவாக எடுத்துக்கொள்ளும்போது நகர மக்களின் நல்வாழ்வுக்காக உரிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தல்.
இத்தகைய தனித்துவமான சேவைக்காக நீங்கள் பங்களிப்புச் செய்கின்றீர்களா?
ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள்................!
மதிப்பீட்டு வரி செலுத்துவதனால் உங்களுக்குக் கிட்டும் தனித்துவமான சிறப்புரிமைகள்
- முழு வருடத்துக்குமான மதிப்பீட்டு வரியை ஒரேமுறையில் சனவரி மாதத்தில் செலுத்தினால் 10% கழிவும் ஒவ்வொரு காலாண்டின் ஆரம்பத்தில் காலாண்டுக்கு உரிய தொகையைச் செலுத்தினால் 5% கழிவும் உங்களுக்குக் கிடைக்கும்.
- நகர சபையின் மூலம் நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டிய சேவைகளுக்கு முன்னுரிமையளித்து துரித சேவையை வழங்குதல்.
- நகர சபை மேற்கொள்ளுகின்ற சமூக அபிவிருத்தி பணிகளின்போது முன்னுரிமையளித்தல்.
- உங்கள் பிள்ளையை பாடசாலைக்குச் சேர்க்கும்போது எதிர்நோக்கும் கஷ்டங்களைத் தவிர்த்தல்.
- காணிகளைத் துண்டுகளாகப் பிரித்தல், விற்றல், ஒப்படைத்தல் என்பவற்றின்போது ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்த்தல்.
- நீர், மின்சாரம் என்பற்றைப் பெற்றுக்கொள்ளும் போது ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்த்தல்.
- வரி மதிப்பீட்டைச் செலுத்தத் தவறுவதன் காரணமாக சொத்துக்களைத் தடைசெய்தல்போன்ற சட்டநடவடிக்கைகள் நீங்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகாமை.
அப்படியானால் நீங்களும் தாமதமின்றி வரி மதிப்பீட்டைச் செலுத்தி சிறப்புமிக்க நகரமொன்றை உருவாக்க பங்களிப்புச் செய்யுங்கள்.